வியக்கவைக்கும் ஹோமியோபதி



வியக்கவைக்கும் ஹோமியோபதி மருத்துவம்,
நோய்க்கான காரணியே நோயைத் தீர்க்கும் மருந்து!

வியக்கவைக்கும் ஹோமியோபதி ரகசியம்

உலகின் மிகவும் இளமையான மருத்துவம் என்ற வசீகரப் பெயர் ஹோமியோபதிக்கு உண்டு. கத்தியின்றி ரத்தமின்றி நோய்களைக் குணமாக்குவதால், பிறந்த 250 ஆண்டுகளிலேயே உலக அளவில் அதிகம் பயன்படுத்தப்படும் மருத்துவத்தில் இரண்டாம் இடத்தைப் பிடித்திருக்கிறது ஹோமியோபதி.
நாள்பட்ட நோய்களுக்கு ஹோமியோபதியில் நல்ல பலன் உண்டு என்பது தெரியும். ஆனால், முதல் உதவிச் சிகிச்சைக்கே ஹோமியோபதியில் நல்ல பலன் உண்டு .
''
நோய்க்கான காரணியை வைத்தே நோயைக் குணப்படுத்தும் மாயாஜாலத்தை ஹோமியோபதி எப்படி நிகழ்த்துகிறது?''
''
ஹோமியோபதி மருத்துவ முறையைக் கண்டுபிடித்த டாக்டர் சாமுவேல் ஹானிமன் ஓர் அலோபதி மருத்துவர். அவர் இந்த மாற்று மருத்துவ முறையைக் கண்டறிந்த விஷயமே சுவாரஸ்யமானது. 'மலேரியாவை உண்டாக்கும் சின்கோனா பட்டைக்கு மலேரியாவைக் குணமாக்கும் ஆற்றலும் உண்டுஎன்று அவர் ஒரு புத்தகத்தில் படித்திருக்கிறார். இதனால், ஆச்சர்யப்பட்டு தானே அந்த சின்கோனா பட்டையைச் சாப்பிட்டுப் பார்த்திருக்கிறார். ஆரோக்கியமாக இருந்த அவருக்கு மலேரியாவைப் போன்ற அறிகுறிகள் உண்டாகி இருக்கின்றன. மீண்டும் அதே சின்கோனா பட்டையைச் சாப்பிட்டபோது அந்த அறிகுறிகள் குணமானது. இதன் மூலம்தான், 'எந்த ஒரு காரணி ஒரு நோயை உண்டாக்குகிறதோ அதே காரணிதான் அதைக் குணப்படுத்தும் இயல்பும்கொண்டதுஎன்று கண்டுபிடித்தார். ஹோமியோபதி இந்தத் தத்துவத்தின் அடிப்படையில்தான் செயல்படுகிறது.''

''அதே காரணியை மறுபடியும் கொடுக்கும்போது அந்த நோயின் தீவிரம் அதிகமாகும்தானே?''
''
டாக்டர் ஹானிமன் அதற்குப் பிறகு மேற்கொண்ட பரிசோதனைகளில் நோய்க்கான காரணிகளையே மருந்தாகக் கொடுத்துச் சோதனை செய்து பார்த்தார். மருந்தின் அளவு அதிகமாகக் கொடுக்கப்பட்டபோது, நோயின் தீவிரம் அதிகமானது. அதே மருந்தின் அளவைக் குறைத்துக் கொடுத்த போது நோயாளிகள் குணமடையத் தொடங்கினார்கள். அதன் பிறகுதான் மிகக் குறைந்த அளவு கொடுக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்தார். நோய் எதனால் ஏற்பட்டது என்ற காரணியை நுட்பமாகக் கண்டறிந்து, அதற்கேற்ற மருந்தைக் குறைந்த அளவு கொடுக்கும்போது நோய் குணமாகிவிடும். சரியான தேர்வும் சரியான அளவும்தான் முக்கியம்.''
''
அலோபதி மருத்துவத்துக்கு இணையாக ஹோமியோபதி மருத்துவத்துக்கு மக்களிடம் வரவேற்பு இல்லையே ஏன்?''

''முதலில் நோயாளி தனக்கு ஏற்பட்டிருக்கும் பிரச்னையைத் தெளிவாக விளக்க வேண்டும். மருத்துவரும் நோயை நுட்பமாக அடையாளம் கண்டு சிகிச்சை அளிக்க வேண்டும். இந்த இரண்டு விஷயங்களில் ஏதாவது ஒன்று சரியாக அமையாதபோது குணமாவது தாமதமாகும். இந்த தாமதத்தால் சிலர் ஹோமியோபதியைத் தவிர்க்கிறார்கள். நிறைய நோயாளிகள் நோய் முற்றிய நிலையில் வருகிறார்கள். அப்படி நீண்ட நாட்கள் கழித்து ஹோமியோபதி மருத்துவரைத் தேடி வரும்போது, அவருக்கு நோய் மட்டுமே நினைவில் இருக்கும். என்ன மாதிரி பிரச்னை என்பது அவருக்கே மறந்துபோயிருக்கும். இதுதவிர ஹோமியோபதி என்பது 'உங்களுக்கே உங்களுக்குஎன்று அளவெடுத்துத் தைக்கும் சட்டையைப் போல் என்று சொல்லலாம். சரியான தேர்வு அமையும் போது நோயைக் குணப்படுத்துவதோடு எதிர்காலத்தில் மீண்டும் அந்த நோய் வராமல் இருக்கும்படி நோயாளியின் எதிர்ப்புச் சக்தியை அதிகமாக்கும் சிறந்த மருத்துவம் ஹோமியோபதி. சாதாரணமான சளித் தொல்லையில் இருந்து புற்றுநோய் வரை ஹோமியோபதியில் சிகிச்சை அளிக்க முடியும்.''
''
ஹோமியோபதி மருத்துவத்துக்குப் பக்க விளைவுகள், பத்தியங்கள் ஏதேனும் இருக்கிறதா?''
''
மிகவும் சிறிய அளவில் மருந்து கொடுக்கும்போது, பக்க விளைவுகள் நிச்சயமாய் வராது. நோய்பற்றி நோயாளி தெளிவாக விவரிக்காமலோ, மருத்துவர் சரியான மருந்தை அளிக்காமல்போனாலோ, பலன் கிடைக்காமல் போகலாம். ஆனால், மிகச் சிறிய அளவிலேயே மருந்து கொடுக்கப்படுவதால் பாதிப்புகள் நிச்சயம் இல்லை. அதேபோல் ஹோமியோபதி மருத்துவத்தில் சிகிச்சை எடுத்துக்கொண்டு இருக்கும்போது எந்தப் பத்தியங்களையும் பின்பற்ற வேண்டியது இல்லை. மற்ற சிகிச்சை முறைகளோடு சேர்த்தும் சிகிச்சை எடுத்துக்கொள்ளலாம்.''

Comments

Popular posts from this blog

இரத்தத்தை அதிகரிக்கும் உணவுகள்

உணவு சாப்பிட்டபின் கட்டாயமாக செய்யக்கூடாதவை.