நெஞ்சை அள்ளும் இஞ்சி 1. இஞ்சி சாறை பாலில் கலந்து சாப்பிட வயிறு நோய்கள் தீரும் . உடம்பு இளைக்கும் . 2. இஞ்சி துவையல் , பச்சடி வைத்து சாப்பிட மலச்சிக்கல் , களைப்பு , மார்பு வலி தீரும் . 3. இஞ்சியை சுட்டு உடம்பில் தோய்த்து சாப்பிட பித்த , கப நோய்கள் தீரும் . 4. இஞ்சி சாறில் , வெல்லம் கலந்து சாப்பிட வாதக் கோளாறு நீங்கி பலம் ஏற்படும் . 5. இஞ்சியை புதினாவோடு சேர்த்து துவையலாக்கி சாப்பிட பித்தம் , அஜீர ணம் , வாய் நாற்றம் தீரும் . சுறு சுறுப்பு ஏற்படும் . 6. இஞ்சியை , துவையலாக்கி சாப்பிட வயிற்று உப்புசம் இரைச்சல் தீரும் . 7. காலையில் இஞ்சி சாறில் , உப்பு கலந்து மூன்று நாட்கள் சாப்பிட பித்த தலைச்சுற்று , மலச்சிக்கல் தீரும் . உடம்பு இளமை பெறும் . 8. பத்துகிராம் இஞ்சி , பூண்டு இரண்டையும் அரைத்து , ஒருகப் வெந்நீரில் கலந்து காலை , மாலை இரண்டு நாட்கள் சாப்பிட மார்பு வலி தீரும் . 9. இஞ்சி சாறோடு , தேன் கலந்து சூடாக்கி காலையில் வெறும் வயிற்றில் ஒரு கரண்டி வீதம் சாப்பிட்டு வெந்நீர் க...