Posts

Showing posts from June, 2013

ஆரோக்கியத்திற்கு கீரைகள்

Image
ஆரோக்கியத்திற்கு கீரைகள் கீரையின் மகத்துவத்தை வார்த்தை களில் அடக்க முடியாது . மனிதனின் ஆகாரத்தில் முக்கிய இடம் பெற்றது கீரை . இதில் பலவகை இருந்தாலும் , அனைத்து வகையான கீரைகளும் மனிதனின் ஆரோக்கியத்தில் முக்கியப் பங்காற்றுகின்றன . கீரையின் மகத்துவ பலன்களை இங்கே பார்ப்போம் .  * புதினாக் கீரையை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் நாக்கில் சுவை உணர்வு அதிகமாகும் . வாய் சுவையற்று இருந்தால் மாறி விடும் . வாந்தி போன்ற குமட்டல் நிற்கும் . நல்ல பசியும் உண்டாகும் . ரத்தத்தில் உள்ள அழுக்குகள் நீங்கி , சுத்தமாகும் . வயிற்று பிரச்சினைகளும் தீரும் .  * அரைக்கீரை என்று அழைக்கப்படும் அறுகீரை காய்ச்சல் , ஜன்னி , கபம் , வாதம் போன்ற நோய்களை நீக்கும் ஆற்றல் பெற்றது . ஆனால் வாயுக் கோளாறுகளை உண்டாக்கும் .    * முருங்கைக் கீரையில் இரும்புச் சத்து அதிகம் . முருங்கைக் கீரையுடன் நெய் கலந்து , தினமும் சாதத்துடன் சாப்பிட்டு வந்தால் உடல் உறுதி பெறும் . ஆனால் புளி சேர்க்கக் கூடாது . உடலில் உள்ள கெட்ட கொழுப்பு கரையும...

சுவை

Image
ஆறு சுவை பழங்கால இந்திய மருத்துவம் நா அறியக்கூடிய சுவைகளை ஆறு வகைகளாகப் பிரிக்கின்றது . உடலின் ஆறு முக்கிய தாதுக்களுடன் இச்சுவைகளைச் சம்பந்தபடுத்தி , உடல் வளர்ச்சியில் இச்சுவைகளின் பங்குகளை விளக்குகின்றது . இனிப்பு , புளிப்பு , உவர்ப்பு , கசப்பு , கார்ப்பு மற்றும் துவர்ப்பு ஆகிய இந்த ஆறுசுவைகளின் பண்புகளையும் , உடல் நலத்திற்கு இவற்றின் பங்குகளைப் பற்றியும்   பார்க்கலாம் . உடலானது ரத்தம் , தசை , கொழுப்பு , எலும்பு , நரம்பு , உமிழ்நீர் , மூளை ஆகிய ஏழு முக்கிய தாதுக்களைக் கொண்டது என்பதனால் உடலை " யாக்கை " என்று கூறினர் . இதில் ஏழாவது தாதுவான மூளை சரிவர இயங்க முதல் ஆறு தாதுக்கள் தகுந்த அளவில் இருத்தல் அவசியம் .   இந்த ஆறு தாதுக்களும் , ஆறு சுவைகளுடன் கீழ்கண்டவாறு சம்பந்தப்பட்டுள்ளன . துவர்ப்பு - இரத்தத்தைப் பெருக்குகின்றது இனிப்பு - தசையை வளர்க்கின்றது புளிப்பு - கொழுப்பினை வழங்குகின்றது கார்ப்பு - எலும்புகளை வளர்க்கின்றது கசப்பு - நரம்புகளை பலப்படுத்துகின்றது உவர்ப்பு - உமிழ்நீரைச் சுரக்கச் ...