Posts

Showing posts from 2013
Image
சிறுநீர்க்கல்லுக்கு ஹோமியோபதி சிகிச்சை சிறுநீர்க்கல்  சிறுநீர்க்கல் பொதுவாக “சிறுநீரகக்கல்” என்றே வழக்கமாக குறிப்பிடப்படுகிறது. சிறுநீர்க்கல் எவ்வாறு உருவாகிறது? சிறுநீர்க்கற்களை உருவாக்கும் மூலப்பொருட்கள் பல இருப்பினும் அவற்றுள் முதன்மையான கால்சியம், ஆக்ஸலேட், யூரிக் அமிலம் ஆகியவை பொதுவாக சிறுநீரில் கரைந்து கழிவுகளாக வெளியேறுகின்றன. ஆனால் சிலரின் சிறுநீரில் இந்தக் கழிவுப்பொருட்கள் அளவுக்கு அதிகமாக இருப்பதால் முழுவதுமாக சிறுநீரில் கரைவதில்லை. கரையாத கழிவுகள் சிறுநீர் உறுப்புகளில் படிகங்களாகத் தங்கி. பின்பு படிகங்கள் ஒன்று சேர்ந்து கற்களாக உருவாகின்றன. மூத்திரக்காய், வடிகுழாய், சிறுநீர்ப்பை என எந்த இடத்திலும் கற்கள் உருவாகலாம். வடிவமும், அளவும் : கற்கள் பல வடிவங்களிலும், அளவுகளிலும் காணப்படுகின்றன. படிகங்கள் ஒன்று சேர்ந்து கற்களாக மாறுவதால் பல கூர்முனைகளைக் கொண்டுள்ளன். கல்லின் வரலாறு : 1. மனித உடலில் சிறுநீர்க்கல் எப்பொழுது உருவாகத் தொடங்கியது என்ற ஆராய்ச்சிகளில் மிகவும் தொன்மை( ! ) வாய்ந்த ஆதாரமாகக் கருதப்படுவது கி.மு. 4800 காலத்திய எகிப்து நாட்டின் ம...

குழந்தையின்மை –மலட்டுத்தன்மை ஹோமியோபதி சிகிச்சை

குழந்தையின்மை – மலட்டுத்தன்மை ஹோமியோபதி சிகிச்சை குழந்தையின்மை – மலட்டுத்தன்மை என்பது ஒரு மனிதனால் புதிதாக ஒரு உயிரினத்தை உருவாக்கவல்ல கருகூடல் என்னும் செயற்பாட்டில் பங்கு கொள்ளும் உயிரியல் ஆற்றலின்மையைக் குறிக்கும் . இந்த மலட்டுத்தன்மை   ஆண்களிலும் , பெண்களிலும் இருக்கலாம் . இந்த மலட்டுத்தன்மை என்பது சிலசமயம் கருத்தரிப்பின்போது , வளர்ந்து வரும் கருவை முழுமையான கருக்காலத்தைக் கடந்து குழந்தையை பெற்றுக் கொள்ள முடியாமல் போகும் பெண்களின் ஆற்றலின்மையைக் குறிக்கவும் பயன்படுத்தப்படுகிறது . இந்த மலட்டுத்தன்மைக்கு பல காரணிகள் இருப்பினும் , அவற்றில் பல மருத்துவ சிகிச்சை முறைகளால் மாற்றியமைக்கப்பட்டு , மலட்டுத் தன்மையிலிருந்து விடுபட உதவுகின்றது . இவற்றை மலட்டுத்தன்மை சிகிச்சை எனலாம் . மலட்டுத்தன்மை அற்ற வளமான பெண்களில் முட்டை வெளியிடலுக்கு சில நாட்கள் முன்னரும் , பின்னரும் கருகூடல் தன்மை காணப்படும் . மாதவிடாய் சுழற்சியின் ஏனைய நாட்களில் இவ்வாறான கருகூடல் தன்மை காணப்படுவதில்லை . பெண்களுக்கான குறைகள் பி...

விந்தணுவின் உற்பத்தியை குறைக்கும் 10 விஷயங்கள்

Image
விந்தணுவின் உற்பத்தியை குறைக்கும் 10 விஷயங்கள்!!! சுடுநீர் குளியல் பெரும்பாலான ஆண்கள் உடல் வலி அதிகம் உள்ளது என்று சூடான நீரில் குளிப்பார்கள். அவ்வாறு அதிகப்படியான வெப்பம் உள்ள நீரில் குளித்தால், விந்தணுவின் தரம் குறைவதோடு, உற்பத்தியும் தடைபடும். எனவே குளிக்கும் போது வெதுவெதுப்பான நீரில் குளிப்பதே நல்லது. உள்ளாடை அணியும் உள்ளாடை மிகவும் இறுக்கமானதாக இருந்தாலும், ஆண் விதையானது வெப்பமாகி, விந்தணுவின் உற்பத்தியை குறைக்கும். எனவே எப்போது தளர்வாக இருக்கும் உள்ளாடையையே அணிய வேண்டும். மொபைல் பொதுவாக ஆண்கள் மொபைலை பேண்ட் பாக்கெட்டில் வைப்பதால், மொபைலில் இருந்து வெளிவரும் கதிர்கள், விந்தணுவின் உற்பத்திக்கு இடையூறு ஏற்படுத்தி, அதன் உற்பத்தியின் அளவைக் குறைத்துவிடும். மேலும் ஆய்வு ஒன்றிலும், மொபைல் போனை அதிகம் பயன்படுத்தினாலும்,விந்தணுவின் உற்பத்தி குறையும் என்றும் கண்டறியப்பட்டுள்ளது. மன அழுத்தம் மன அழுத்தம் உடலில் பல பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. அதில் ஒன்று தான் விந்தணு உற்பத்தி குறைவு. சில சமயங்களில் இவை மலட்டுத்தன்மையை ஏற்படுத்திவிடும். எனவே இத்தகைய மன...
Image
HOMOEOPATHY ACTS

Homeopathy: Myths and Misconceptions

Image
Homeopathy: Myths and Misconceptions Homeopathy is a simple, safe, effective, and scientific form of medicine which offers permanent cures. It is more than 200 years old and the second most popular medicine in the world. Homeopathy treatment is generally given to treat the root cause of the illness. They are effective in treating acute, chronic ailments. Most indiviuals stay aware from these medicines due to the various myths attached to it. Homeopathy is a very slow process Homoeopathy is a science which not only palliates/relieves but CURES the ailments. It does not consider a single symptom but the entire patient/person as a whole. Unlike other pathies which gives quick results disguising the ailment’s roots within, homoeopathy works on the root cause and get the ailment cured from the base itself. It is a myth that homoeopathy is a slow process. The time required for the homeopathic medicines to show results depends upon the person’s condition...

உணவு சாப்பிட்டபின் கட்டாயமாக செய்யக்கூடாதவை.

உணவு சாப்பிட்டபின் கட்டாயமாக செய்யக்கூடாதவை .  ஒரு மனிதன் ஆரோக்கியமாக வாழ உணவுப் பழக்கவழக்கங்கள் இன்றியமையாத ஒன்று. 1. சாப்பிட்ட பின்பு ஒருவர் சிகரெட் பிடித்தால், அது சாதாரண நேரங்களில் சிகரெட் பிடிப்பதைவிட மிகப்பெரிய கெடுதலை விளைவிக்கும். 2. சிகரெட்டுகளை ஒரே நேரத்தில் பிடித்தால் எவ்வளவு பெரிய புற்றுநோய் அபாயம் உண்டோ அவ்வளவு பெரிய தீமையாகும். 3. அதேபால் சாப்பிட்டவுடனேயே பழங்களைச் சாப்பிடும் பழக்கம் நம்மில் பலருக்கு உள்ளது, அது கெடுதியானது. காரணம் உடனே அது காற்றினை வயிற்றுக்குள் அனுப்பி வயிறு உப்புசத்திற்கு ஆளாக்கும் நிலையை(Bloated with air) உருவாக்குகிறது. எனவே சாப்பிடுவதற்கு ஒரு மணிநேரம் முன்பு பழம் சாப்பிடுங்கள் அல்லது சாப்பிட்டு ஒரு மணி அல்லது 2 மணி நேரத்திற்குப் பின்பு பழங்களைச் சாப்பிடும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். 4. சாப்பிட்டவுடன் தேநீர் அருந்தாதீர். ஏனெனில் தேநீர் இழையில் ஆசிட் உள்ளது. இது உணவில் உள்ள புரதச்சத்தினை கடினமாக்கி(Hardening) செரிமானத்தைக் கஷ்டமாக்கும் வாய்ப்பு ஏராளம் உண்டு. 5. சாப்பிட்ட பிறகு உங்களது பெல்ட்டுகளை தளர்த்தி விடாதீர்...

ஜின்செங்

Image
ஜின்ஜெங்: ஒரு புதிய கண்டுப்பிடிப்பு.! * அமெரிக்காவிலும், இங்கிலாந்திலும் ஒரு வேர் விறுவிறுப்பாக விற்பனையாகிறது. அதன் பெயர், ஜின்ஜெங். இது சீனாவில் உற்பத்தியாகிறது. * இந்த வேரை அரைத்துக் குடிக்கிறார்கள். மாத்திரை, கேப்ஸ்யூல் ஆக்கி விழுங்குகிறார்கள், தேநீர், காபியில் கலந்து பருகுகிறார்கள். மதுபானத்தில் சேர்த்துக் குடிக்கிறார்கள். சோப்பிலும் சேர்த்து உடம்பில் தேய்த்துக் குளிக்கிறார்கள். * காரணம், ஜின்செங் ஆண்மைக் குறைவைப் போக்குகிறது. மலேரியா, இஸ்மோரியா, தலைவலி, கேன்சர், சாதாரண ஜலதோஷம் ஆகியவற்றுக்கு நல்ல மருந்தாக உள்ளது. * ஜின்செங் செடி 5 ஆயிரம் ஆண்டுகளாக சீனாவில் வளர்க்கப்படுகிறது. 1948-ல் இளம் ரஷ்ய விஞ்ஞானி ஒருவர், ஜின்செங் வேரை ராணுவ வீரர்களுக்குக் கொடுத்துப் பார்த்தார். * உடனே அவர்கள் அதிகமான சுறுசுறுப்பு அடைந்து வேலை செய்தார்கள். அதிலிருந்து ஐரோப்பாவில் ஜின்செங் வேர் பிரபலமாகிவிட்டது. சமீப ஆண்டுகளில் பல கோடி ரூபாய்க்கு ஜின்செங் வேர்களை அமெரிக்கா வாங்கியுள்ளது. * ஜின்செங்கின் மருத்துவக் குணங்களைப் பற்றி ஆராய பல சர்வதேச மாநாடுகள் நடைபெற்று வருகின்றன. * இர...

இரத்தத்தை அதிகரிக்கும் உணவுகள்

Image
உடலில் இரத்தத்தை அதிகரிக்க இரத்தத்தை அதிகரிக்கும் உணவுகள்... மாதுளை: மாதுளைச் சாறு இரத்தத்தின் ஆக்ஸிஜன் அளவை மேலேறச் செய்கிறது. ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் கொலஸ்ட்ராலைக் குறைத்து, கட்டற்ற மூலக்கூறுகளோடு போராடி, ஆபத்து விளைவிக்கக்கூடிய இரத்த உறைவுகளில் இருந்து காத்து, அருஞ்சேவை புரிகிறது. இவ்வாறு செய்வதன் மூலம் கொஞ்சம் கொஞ்சமாக, இரத்த ஓட்டத்தை சீராக்கி, இரத்தத்தின் ஆக்ஸிஜன் அளவுகளை இவை அதிகப்படுத்துகின்றன. நன்னாரி வேர்: மூலிகைகளில் ஒன்றான நன்னாரி வேர், உடலில் உள்ள இரத்த அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க சிறந்தது. அதிலும் இந்த வேரில் அதிகமான ஆன்டி-செப்டிக் பொருள் இருக்கிறது. இது இரத்ததில் இருக்கும் கிருமிகளை அழித்து, சுத்தமாக வைக்கிறது. கற்றாழை: கற்றாழையில் இரத்தத்தில் ஏற்படும் அழற்சியை தடுக்கும் பொருள் அதிக அளவு உள்ளது. ஆகவே இவற்றை சாப்பிட்டாலும் இரத்த அணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். பீட்ரூட்: இதில் அதிகமான அளவு இரும்புச்சத்து இருப்பதோடு, உடலுக்கு தேவையான அளவு இரத்த அணுக்களை அதிகரிக்கும் புரோட்டீன் இருக்கிறது. மேலும் இதை உண்பதால் உடலில் இரத்த ஓட்டம் அதிகரி...

சப்போட்டா பழம்..!

Image
சப்போட்டா பழம்..! 1) தாவர இயல் பெயர், ‘அக்ரஸ் சப்போட்டா’ (Achars sapota). . சப்போட்டேசியே (sapotceae) என்னும் தாவரக் குடும்பத்தைச் சேர்ந்தது. சப்போட்டாவிற்கு, ‘அமெரிக்கன்புல்லி’ என்று ஒரு சிறப்புப்பெயர், செல்லப் பெயர் உண்டு. 2) 100 கிராம ் சப்போட்டாப் பழத்தில் புரதம் 1.0 கிராம், கொழுப்பு 0.9 கிராம், நார்ச் சத்து 2.6 கிராம், மாவுப்பொருள் 21.4 கிராம், கால்சியம் 2.1 மில்லி கிராம், பாஸ்பரஸ் 27.0 மில்லி கிராம், இரும்புச் சத்து 2.0 மில்லி கிராம், தரோட்டின் 97 மைக்ரோகிராம், ரிபோஃபிளோவின் 0.03 மில்லி கிராம், நியாசின் 0.02 மில்லி கிராம் மற்றும் வைட்டமின் சி 6.1 மில்லி கிராம் உள்ளது. தினமும் இரண்டு சப்போட்டா பழம் சாப்பிட்டால் உச்சி முதல் உள்ளங்கால் வரை பலன் தரும். இளமைக்கு கியாரன்டி. 3) சப்போட்டா பழம், ரத்த ஓட்டத்தை சீராக்கி, கொழுப்பை- நீக்குகிறது. வாய்ப்புண், வயிற்றெரிச்சல், மூல நோய் மற்றும் மலச்சிக்கலுக்கும் தீர்வு தருகிறது., எலும்புகள் வலுவடையும் 4) இரவில் உறக்கம் வராமல் கஷ்டப்படுபவர்களுக்கு அருமருந்து இந்த சப்போட்டா. இதை சாறாக்கி அருந்தலாம். பழக்கூழ், ஜாம், சிரெப...

வியக்கவைக்கும் ஹோமியோபதி

Image
வியக்கவைக்கும் ஹோமியோபதி மருத்துவம் , நோய்க்கான காரணியே நோயைத் தீர்க்கும் மருந்து ! வியக்கவைக்கும் ஹோமியோபதி ரகசியம் உலகின் மிகவும் இளமையான மருத்துவம் என்ற வசீகரப் பெயர் ஹோமியோபதிக்கு உண்டு . கத்தியின்றி ரத்தமின்றி நோய்களைக் குணமாக்குவதால் , பிறந்த 250 ஆண்டுகளிலேயே உலக அளவில் அதிகம் பயன்படுத்தப்படும் மருத்துவத்தில் இரண்டாம் இடத்தைப் பிடித்திருக்கிறது ஹோமியோபதி . நாள்பட்ட நோய்களுக்கு ஹோமியோபதியில் நல்ல பலன் உண்டு என்பது தெரியும் . ஆனால் , முதல் உதவிச் சிகிச்சைக்கே ஹோமியோபதியில் நல்ல பலன் உண்டு . '' நோய்க்கான காரணியை வைத்தே நோயைக் குணப்படுத்தும் மாயாஜாலத்தை ஹோமியோபதி எப்படி நிகழ்த்துகிறது ?'' '' ஹோமியோபதி மருத்துவ முறையைக் கண்டுபிடித்த டாக்டர் சாமுவேல் ஹானிமன் ஓர் அலோபதி மருத்துவர் . அவர் இந்த மாற்று மருத்துவ முறையைக் கண்டறிந்த விஷயமே சுவாரஸ்யமானது . ' மலேரியாவை உண்டாக்கும் சின்கோனா பட்டைக்கு மலேரியாவைக் குணமாக்கும் ஆற்றலும் உண்டு ’ என்று அவர் ஒரு புத்தகத்...